Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

படித்ததில் மனம் நெகிந்தது!

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...

விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

மருத்துவரைக் கண்டதும் கோபமாக,
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார்.

மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு
வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறினார்.

"பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும்
ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார்.

மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம். நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.

"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார். அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், "உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.

சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், "அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட நேரமில்லையா?"
என்று நொந்துகொண்டார் தந்தை.

அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்... இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் சடங்கில் இருந்தார். உங்கள் மகனுக்காக
அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன் அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்" என்று கூறினாள்.

நீதி: எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது, அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!

"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை... மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..." ‪‬

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை.

உறவை தொலைக்காதே!

நெருங்கிப் பழகிய ஒருவரைத் தொலைத்து
பின்னர் உறவைப் புதுப்பித்துக் கொள்ள முயலும்போது
அவர் அதே ஆளாக
நமக்குத் திரும்பக் கிடைப்பதில்லை...!!

பல் துலக்குங்க!


புன்னகை என்பது எதிரியை கூட நண்பனாக்கும்.

ஆனால்..
பல் துலக்காமல் சிரித்தால்..
நண்பனை கூட எதிரியாக்கி விடும்.

உண்மை வரிகள்!


நேற்று ஜெயித்தவன் இன்றும் ஜெயிக்கலாம்...

ஆனால்..

நேற்று தோற்றவன் தினமும் தோற்பதில்லை!

அற்புத வரிகள்


எப்போதும் சந்தோஷமாக இரு..

கவலையும் உன்னை பார்த்து
கவலைப்படும்.

தத்துவம்



காலியாகி போன மது புட்டி சொன்னது:

இன்று உன்னால் நான் காலி ஆனேன்!

நாளை நீ என்னால் காலி ஆவாய்!!


மது அருந்துவதை நிறுத்துங்கள்.
உள்ளமும் இல்லமும் மலரும்..

பொய் பேசாதே!

பொய் பேசுபவனுக்கு கிடைக்கும்
மிகப் பெரிய தண்டனை..

அவன் உண்மையை பேசும்போது
யாரும் நம்புவதில்லை!
எதிர்பார்த்த வாழ்க்கை இங்கு யாருக்கும் அமைவது இல்லை!

ஆனாலும்..

எதிர்பார்க்காமல் யாரும் இங்கு வாழ்வதும் இல்லை..
"கல்வி" ஒருவனை அறிவாளியாக மாற்றலாம்...
ஆனால் "அன்பு" மட்டுமே
ஒருவனை மனிதனாக மாற்றும்!

வேகமாக ஓடி என்ன பயன்?

செல்லும் பாதை சரியாக இல்லாத போது,
வேகமாக ஓடி என்ன பயன்..

சுவாமி விவேகானந்தர்

எது சிறந்தது?

வெற்றி பெற்றேன் என்பதை விட,
யாரையும் வேதனை படுத்தவில்லை
என்பதே சிறந்தது...

கோபம்

கோபம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
நமக்கு நாமே கொடுத்து கொள்ளும்
தண்டனை!