இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா.. என்பது ஏன் தெரியுமா?

நம் ஊரில் மழை பெய்யும்போது இடி இடித்தால் போதும்.
அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

அர்ஜுனன் அம்பெடுத்து வந்து இடியை தடுத்து நிறுத்துவார் என்பதில்லை.

உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
இடி பலமாக இடிக்கும் போது,
சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.
இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.


அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.
ஜு என்னும் போது, வாய் குவிந்து காற்று வெளியேறும்.
னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.
இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.


அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள். அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது
மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன்,
காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும்
இதில் புதைந்து கிடக்கிறது.
இனிமேல், இடி இடித்தால் அர்ஜுனா கோஷம் ஒலிக்கட்டும்!