ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம்.
( ஒருத்தன்னு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க)..
அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்..
அப்போ எல்லாருக்கும் ஒரு டவுட்டு ..
செத்தவன எரிக்கிறதா? புதைக்கிறதா ??
எரிச்சா பிரச்சனை இல்லை….. புதைச்சா ரெண்டு பிரச்சனை…
புதைச்ச இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா
முளைக்கலன்னா பிரச்சனை இல்லை…
முளைக்கலன்னா பிரச்சனை இல்லை…
முளைச்சா ரெண்டு பிரச்சனை
மாடு திங்குமா திங்காதா..
திங்கலன்னா பிரச்சனை இல்லை… தின்னா ரெண்டு பிரச்சனை…
பால் குடுக்குமா குடுக்காதா?
குடுக்கலன்னா பிரச்சனை இல்லை, குடுத்தா ரெண்டு பிரச்சனை …
குடிக்க்கலாமா வேண்டாமா ?
குடிக்கலன்னா பிரச்சனை இல்லை…
குடிச்சா ரெண்டு பிரச்சனை…
குடிச்சவன் பொழைப்பானா மாட்டானா?
பொழச்சுட்டா பிரச்சனை இல்லை…
பொழைக்கலன்னா ரெண்டு பிரச்சனை…
அவன எரிக்கிறதா புதைக்கிறதா?
எரிச்சிட்டா பிரச்சனை இல்லை…
புதைச்சா???
இப்போ நீங்க சொல்லுங்க… நான் கதைய தொடரவா வேண்டாமா?