இந்த உலகமே அழகாக இருந்திருக்கும்...

ஒரு மனிதன்

ஒரு குயிலிடம் போய் கேட்டானாம், நீ கருப்பாக இல்லை என்றால் எவ்வளவு அழகாக இருந்துருப்பாய் என்று....

கடலிடம் போய் கேட்டானாம், நீ உப்புத் தன்மை இல்லாமல்இருந்திருந்தால் அழகாக இருந்திருப்பாய் என்று....

ரோஜா செடியிடம் போய் கேட்டானாம், உன்னில் முள் இல்லாமல் இருந்தால் நீயும் அழகாக இருந்திருப்பாய் என்று......

ஆனால் மூன்றும் சேர்ந்து மனிதனிடம் என்ன சொன்னதாம் தெரியுமா.....?

அடே மனிதா! உன்னிடம் அடுத்தவர்களை குறை கூறும் இந்த குணம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்

இந்த உலகமே நன்றாக இருந்திருக்கும் என்று...!!!